Type Here to Get Search Results !

Tamil Song - 258 - Oru Poothum Maravatha Unmaip

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?

சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை --- ஒருபோதும்


1. கப்பலினடித் தட்டில் - களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன் சத்தங்கேட்டால் - கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை உனக்கு - ஏற்ற தந்தை நானென்பார் --- ஒருபோதும்

2. கடல் தனக் கதிகாரி - கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க வெல்லை - கற்பித்தாரவர்சேயே,
விடுவாளோ பிள்ளையத் தாய் - மேதினியிற்றனியே?
மெய்ப் பரனை நீ தினம் - விசுவாசித்திருப்பாயே --- ஒருபோதும்

3. உன்னாசை விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா?
உறக்க மில்லாதவர் கண் - உன்னைவிட டொழியுமா?
இந்நில மீதிலுனக் - கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? --- ஒருபோதும்

4. உலகப் பேயுடலாசை - உன்னை மோசம் செய்யாது,
ஊக்கம் விடாதே திரு - வுளமுனை மறவாது,
இலகும் பரிசுத்தாவி - எழில் வரம் ஒழியாது,

என்றும் மாறாத நண்பன் - இரட்சகருடன் சேர்ந்து --- ஒருபோதும்